

மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (28 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்று ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே உள்ளது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்த நிலையில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டு உள்ளது.