'எனது ஒரே கவலை' - 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்த ரவிசாஸ்திரி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றமாக காயமடைந்த ஜடேஜா, ராகுலுக்கு பதிலாக பட்டிதார், குல்தீப் யாதவும், சிராஜிற்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் விளையாடும் அணி குறித்து தனது கருத்தை இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். வர்ணனை செய்து கொண்டிருந்தபோது இது தொடர்பாக அவர் கூறியதாவது,

எனது ஒரே கவலை வாஷிங்டன் சுந்தரை விட முகேஷ் குமாரைத் தேர்ந்தெடுத்ததுதான். குறிப்பாக இந்த விசாகப்பட்டினத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த பிறகு, முகேஷ் எந்தளவுக்கு உபயோகமாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com