உலகக்கோப்பை அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது - பிசிசிஐ

உலகக்கோப்பை அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது என ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகக்கோப்பை அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது - பிசிசிஐ
Published on

புதுடெல்லி,

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன.

அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.உலகக்கோப்பை தொடருக்கு முதலில் வெளியிடப்பட்ட அட்டவணையில் ஐசிசி பல மாற்றங்கள் செய்து புதிய அட்டவணை வெளியிட்டது

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நவராத்திரி திருவிழா காரணமாக பின்னர் அக்.14ஆம் தேதி நடத்தப்படும் என்று தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமல்லாமல், 9 போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஐதராபாத்தில் அக்டோபர் 9ஆம் தேதி நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது, அக்டோபர் 10ம் தேதி ஐதராபாத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளதாக புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடுத்தடுத்த நாட்களில் இரு போட்டிகளை நடத்துவது சவாலானது என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதால் ஒரு போட்டியின் தேதியை மாற்றுமாறு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது என பிசிசிஐ ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்ப தொடருக்கான அணியை தேர்வு செய்த பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை சந்தித்ததாகவும் அப்போது உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com