மீண்டும் சொதப்பிய பண்ட்.. சஞ்சீவ் கோயங்கா கொடுத்த ரியாக்சன்.. வைரல்

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் சொதப்பிய பண்ட்.. சஞ்சீவ் கோயங்கா கொடுத்த ரியாக்சன்.. வைரல்
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் 7 ரன்களில், ஆட்டமிழந்து. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பண்ட் (ரூ.27 கோடி) நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்புகிறார். இந்த சீசனில் அவர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இது 6-வது முறையாகும். நடப்பு சீசனில் வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இந்த ஆட்டத்தை மைதான பால்கனியில் இருந்து பார்த்து கொண்டிருந்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, பண்ட் ஆட்டமிழந்ததும் அதிருப்தியடைந்து அங்கிருந்து சென்றார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com