பாலஸ்தீன கொடி ஒட்டிய ஹெல்மெட் உடன் விளையாடிய காஷ்மீர் வீரர் - போலீசார் விசாரணை

.இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
பாலஸ்தீன கொடி ஒட்டிய ஹெல்மெட் உடன் விளையாடிய காஷ்மீர் வீரர் - போலீசார் விசாரணை
Published on

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் பாலஸ்தீன கொடியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.'ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில்' ஒரு போட்டியில் விளையாடும்போது புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடினார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக புர்கான் பட்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மேலும், ஏற்பாட்டாளர் ஜாஹித் பட் மற்றும் போட்டிக்கு மைதானத்தை வழங்கிய நபரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com