

கொல்கத்தா,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. மேற்கு வங்காள மாநிலம் கல்யாணியில் நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால் அணி, ஜம்மு காஷ்மீரை எதிர்கொள்கிறது.
லக்னோவில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் உத்தரகாண்ட் அணி, 8 முறை சாம்பியனான கர்நாடகாவை சந்திக்கிறது.