

சென்னை,
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் 168 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போட்டியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆடாமல், அதிக ஆபத்தான ஷாட்களை விளையாடுவது குறித்து அஸ்வின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அவர் தற்போது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். ரிஷப் பண்ட் மீதான எனது எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.அணியின் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்வதே முக்கியம் என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.