இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரியான் டோஷேட் விலகல் ?

அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரியான்  டோஷேட் விலகல் ?
Published on

மும்பை,

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரியான் டென் டோஷேட் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து ரியான் டோஷேட் விலக முடிவு செய்துள்ளார்.

2024-ல் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருடன் அவர் விலக உள்ளார்.இதனை அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com