ஷர்துலின் பேட்... ரோகித்தின் சதம்! லார்ட்ஸில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

அபாரமான சதம் விளாசி தனது பேட்டிங் திறனை மீண்டும் நிரூபித்தார்.
ஷர்துலின் பேட்... ரோகித்தின் சதம்! லார்ட்ஸில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறிய இந்திய வீரர் ரோகித் சர்மா, 3-வது போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் அபாரமான சதம் விளாசி தனது பேட்டிங் திறனை மீண்டும் நிரூபித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் ரோகித் சர்மா முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 3-வது போட்டியில் ரோகித் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதிலும் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் அழுத்தமும் அதிகமாக இருந்தது.

அந்த சூழலில் களமிறங்கிய ரோகித் சர்மா, தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 138 ரன்கள் விளாசி அசத்தினார்.

இது லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் சர்மா பதிவு செய்த முதல் சதமாகும்.

இந்த சதத்திற்கு ரோகித் பயன்படுத்திய பேட் எப்படி அவரிடம் வந்தது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய ரோகித்,

“ கடைசி ஒருநாள் தொடரில், கடைசி போட்டியில் நான் அதிக ரன்கள் எடுத்தேன். அந்த பேட் எனக்கு ஷர்துல் கொடுத்தது” என்று ரோகித் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com