

டோக்கியோ,
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் வங்காளதேச அணிக்கு எதிராக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 37 ரன்கள் எடுத்ததன் மூலம், மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான அரையிறுதியில் அதிரடியாக விளையாடிய மந்தனா, 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.அவரது ஸ்டிரைக் ரேட் 194-க்கும் அதிகமாக இருந்தது.
இந்தப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்தின் முன்னாள் வீராங்கனை சுசி பேட்ஸ் 4,758 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். மந்தனா 8 ரன்களை கடந்ததும் பேட்ஸின் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார்.