இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஒலிம்பிக் சங்கம்

சிறப்பு சலுகை வழங்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம், தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த  ஒலிம்பிக் சங்கம்
Published on

புதுடெல்லி,

ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே தங்குமிடங்களை ஒதுக்கியுள்ளனர்.

ஆனால் அந்த வசதிகள் உயர்தரமானவை அல்ல என்றும், பி.சி.சி.ஐ. கவலை தெரிவித்தது.

 கிரிக்கெட் அணிக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம், தெளிவுபடுத்தியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்பாட்டாளர்கள் வழங்கும் வசதி தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் பிசிசிஐ சொந்த ஏற்பாடுகளைச் செய்யும் சுதந்திரம் உள்ளது; வீரர்களுக்கான உணவு, சரியான நேரத்தில் போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றடைவதை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை பிசிசிஐ ஏற்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com