ஐ.பி.எல் ஏலம்: முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்காத அணிகள்

ஆச்சரியமாக சுரேஷ் ரெய்னா மற்றும் ஸ்டீவன் ஸ்மித், ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஐ.பி.எல் ஏலம்: முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்காத அணிகள்
Published on

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை அவர்களின் அடிப்படைத்தொகையான ரூ. 2 கோடிக்கு யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

முக்கிய நட்சத்திர வீரர்களான மூவரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com