டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி- பார்படாஸ் சென்றடைந்த இந்திய அணி

இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி- பார்படாஸ் சென்றடைந்த இந்திய அணி
Published on

பார்படாஸ்,

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் பார்படாஸ் நகரில் நாளை நடைபெற உள்ளது.

2-வது டி20 உலகக்கோப்பைக்கு குறிவைத்து இந்தியா அணி தயாராகி வருகிறது. மறுபுறம் ஐ.சி.சி. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்று அதனை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற முழு மூச்சுடன் போராட உள்ளது. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தற்போது பார்படாஸ் சென்றடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com