

மும்பை,
10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீராங்கனைகள் மும்பையில் இருந்து இன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். இந்திய வீராங்கனைகளுக்கு மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 14ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.