

சென்னை,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில், இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. குரூப் ’ஏ’ பிரிவில் இருக்கும் நெதர்லாந்து - நமீபியா அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு மோதுகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு குரூப் ’டி’ பிரிவில் இருக்கும் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் களம் காண்கின்றன. அதேபோல கொழும்புவில் இன்று இரவு 7 மணிக்கு குரூப் ’ஏ’ பிரிவில் இருக்கும் அமெரிக்கா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.