ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் விலகிய இளம் வீரர் - மாற்று வீரராக இணைந்த அதிரடி ஆட்டக்காரர்

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

மேலும், காயம் காரணமாக விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com