

மும்பை,
இலங்கை தொடரில் மாஸ் காட்டிய தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் தேவதத் படிக்கல் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 3-வது வரிசையில் களமிறங்கிய டிக்கல், 2 சதங்கள் உள்பட மொத்தம் 328 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ (Player of the Series) விருதையும் தட்டிச் சென்றார்.
படிக்கலின் இந்த அபாரமான ஆட்டத்தை பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வெளியிட்ட பதிவில்,
“படிக்கல் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரது பேட்டிங் ஸ்டைல் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்திய அணியின் 3-வது வரிசையில் களமிறங்க அவர் மிகவும் பொருத்தமானவர். இப்படிப்பட்ட ஒரு வீரர் கிடைத்திருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம்’ என்று தெரிவித்துள்ளார்.