

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியததன் பலனாக, இந்திய அணி ஐசிசி சர்வதேச டி20 அணிகள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் 1 டி20 அணியாக மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.