டெஸ்ட் தொடர்: இந்தியாவை வீழ்த்துவோம் - இங்கிலாந்து வீரர் சவால்

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். அத்துடன் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தியா நாங்கள் தோற்கடிக்க வேண்டிய அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். பும்ராவின் பந்துவீச்சை கடந்த டெஸ்ட் தொடரில் நான் எதிர்கொண்டுள்ளேன். அவர் எனக்கு எதிராக என்ன செய்வார் என்பது தெரியும்.

அதில் நல்ல விஷயம் என்னவென்றால், அவருக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதும் எனக்கு தெரியும். எனவே அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். முகமது ஷமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com