இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது,
"இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம். இந்த ஹீரோக்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த். என தெரிவித்துள்ளார் .