அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்: ராகுல் டிராவிட்

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம் என இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார்.
அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்: ராகுல் டிராவிட்
Published on

மும்பை,

மும்பை டெஸ்டில் வாகை சூடிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இளம் வீரர்கள் நன்றாக ஆடுவதை பார்க்கும் போது இனி அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது. இதனால் நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம். ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும் போது ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்ற தெளிவான தகவல் பரிமாற்றம் எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்றார்.

இதன் மூலம் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளதை டிராவிட் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com