

மக்கே,
ஆஸ்திரேலியா–வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மக்கேவில் நடைபெற்ற இந்தப் போட்டி வெறும் இரண்டு நாட்களிலேயே முடிந்தது. இதன் மூலம் முதல் டெஸ்டில் சந்தித்த அதிர்ச்சி தோல்விக்குப் பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
தோல்வி தொடர்பாக பேசிய வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறியதாவது,
உண்மையாகச் சொன்னால், இது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்று நான் நம்புகிறேன். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. மூன்று இன்னிங்ஸ்களுமே கடினமாக இருந்ததாக நினைக்கிறேன். இருப்பினும், இதை காரணமாகக் கூற முடியாது; நாங்கள் போதுமான அளவு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. அவர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர், எனவே சவால் இருந்தது. இனிவரும் போட்டிகளில் நாங்கள் மேம்படுத்த வேண்டிய சில தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் உள்ளன என்று நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார்.