தொடர் தோல்விக்கு காரணம் என்ன ? இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம்

100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
தொடர் தோல்விக்கு காரணம் என்ன ? இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம்
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதியடுத்து, 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக இந்தியா அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது,

நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனால், சில ஆட்டங்களில் ஒரு அணி மோசமான அணியாக மாறிவிடாது. சில சமயங்களில் எதிரணியினர் நம்மை விடச் சிறப்பாக விளையாடலாம், அல்லது ஆடுகளச் சூழலை நாம் சரியாகக் கணிக்கத் தவறியிருக்கலாம். ஆட்டத்தின் போக்கைச் சரியாகப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு நாங்கள் அதைச் சரியாகச் செய்யவில்லை. என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com