

கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் குணதிலகா நேற்று முன்தினம் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. குணதிலகாவின் நண்பர் ஒருவர் மீது நார்வே இளம்பெண் கற்பழிப்பு புகார் அளித்து இருப்பதாகவும், அந்த சம்பவம் நடந்த போது குணதிலகாவும் அந்த ஓட்டலில் இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.