

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் உள்ளார். அவரது பணி காலத்தில் இந்தியா மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்று வரலாறு படைத் துள்ளது.
ஜூன் மாதத்துடன் அவரது பதவி காலம் முடிகிறது. ஆனால் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரை ஒப்பந் தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தி யுள்ளார். அவரது வேண்டுகோளை கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது விரைவில் தெரிய வரும்.