இந்தியாவுக்காக கோப்பைகளை வெல்வதுதான் இலக்கு: கம்பீர்

தொடர்ந்து நிலையான கிரிக்கெட்டையே விளையாடி வருகிறோம்.என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக கோப்பைகளை வெல்வதுதான் இலக்கு: கம்பீர்
Published on

கொழும்பு,

காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வற்றி பெற்ற இந்திய அணி, தற்போது நாளை கொழும்பில் நடைபெறும் 2வது டெஸ்டிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர விரும்புகிறது.

இந்திய அணி தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது,

எனது இலக்கு இந்தியாவுக்காக கோப்பைகளை வெல்வதுதான். பார்வைகளையும் லைக்குகளையும் பெறுவது அல்ல. தரவரிசைகள் எனக்கு முக்கியமில்லை. நாங்கள் எந்த சிரமத்திலும் இல்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியாயமான அளவில் சிறப்பாக விளையாடி வருகிறோம். தற்போது அணியில் மாற்றம் நடைபெற்று வருகிறது. அந்த மாற்றக் காலத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து தொடர்ந்து நிலையான கிரிக்கெட்டையே விளையாடி வருகிறோம்.என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com