மகளிர் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதுகின்றன.
image courtesy:twitter/@wplt20
image courtesy:twitter/@wplt20
Published on

மும்பை,

3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி வதோதராவில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் லீக் சுற்று நடந்தது.

லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் (5 வெற்றி, 3 தோல்வி, 10 புள்ளி) முதலிடம் பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளி) ரன்-ரேட் அடிப்படையில் பின்தங்கியதால் 2-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி) 3-வது இடமும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) முறையே 4-வது, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறின.

இதில் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் - மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com