மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி. வாரியர்ஸ்

உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி. வாரியர்ஸ்
Published on

லக்னோ,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் உ.பி. வாரியர்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜார்ஜியா வால் அரைசதம் அடித்தார். கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்களும், தீப்தி சர்மா 27 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அமெலியா கெர்  5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com