பெண்கள் டி20 : இந்தியாவுக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி

இந்தியா சார்பில் சைகா இஷாக், ஸ்ரேயங்கா பட்டீல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பெண்கள் டி20 : இந்தியாவுக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி
Published on

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .

அதன்படி தொடக்கத்தில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் மயா பவுச்சியர் ரன் எதுவும் எடுக்காமலும் , சோபியா டங்க்லி 11 ரன்களும் , ஆலிஸ் கேப்ஸி 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் இழந்தாலும் ஹீதர் நைட் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய ஹீதர் நைட் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் சைகா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com