பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

தொடக்க வீராங்கனை அலிக்சா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரி உட்பட 170 ரன்கள் விளாசி அசத்தினார்.
பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Published on

கிறிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.

ராகேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி சதம் அடித்து அசத்தினார். அவர் 138 பந்துகளில் 170 ரன்கள் குவிதார். இதில் 26 பவுண்டரிகள் அடங்கும். பெத் மூனி 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையை தனதாக்க 357 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com