

கொல்கத்தா,
கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசில் தேசிய அணி இந்தியா வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக கொல்கத்தாவில் பிரேசில் அணி ஒரு சர்வதேச நட்பு போட்டியில் விளையாட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026-ம் ஆண்டு அக்டோபர் மாத சர்வதேச கால்பந்து இடைவேளையில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் இடமாக கொல்கத்தா முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணிக்கு இந்திய ரசிகர்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவு, இந்தியாவில் போட்டி நடத்துவதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரேசில் அணி இந்திய மண்ணில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டால், அது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும்.