

சியாட்டில்,
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜி' பிரிவில் எகிப்து - ஈரான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு சியாட்டிலில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலேயே எகிப்து வீரர் மஹ்மூத் சாபர் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.
பின்னடைவை சந்தித்த ஈரான் அணிக்கு 14-வது நிமிடத்தில் ராமின் ரெசையன் கோல் அடித்தார். இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும், 1-1 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிந்தது.
2-வது பாதியில் வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. இருப்பினும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் கோல்கீப்பர்களின் சிறப்பான செயல்பாடும் காரணமாக மேலும் எந்த கோலும் பதிவாகவில்லை.
இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த 'ஜி' பிரிவு லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் எகிப்து மற்றும் ஈரான் அணிகள் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன