நட்புறவு கால்பந்து; கொல்கத்தாவில் இந்தியா - பிரேசில் மோதல்...ரசிகர்கள் உற்சாகம்

பிரேசிலுக்கு எதிராக இந்திய அணி களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்புறவு கால்பந்து; கொல்கத்தாவில் இந்தியா - பிரேசில் மோதல்...ரசிகர்கள் உற்சாகம்
Published on

கொல்கத்தா,

5 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி, அக்டோபர் 3-ஆம் தேதி கொல்கத்தாவில் இந்திய அணியை எதிர்த்து சர்வதேச நட்புறவு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய கால்பந்து வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2026 உலகக் கோப்பைத் தொடரின் போது இந்திய ரசிகர்கள், குறிப்பாக கொல்கத்தாவில் பிரேசில் அணிக்கு அளித்த உற்சாகமான ஆதரவைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு இந்தியாவில் போட்டி நடத்தும் முயற்சியை முன்னெடுத்தது. ஆரம்பத்தில் வங்காளதேசம் , சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட நாடுகளும் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இந்தியாவுடனே வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக கால்பந்தின் முன்னணி அணிகளில் ஒன்றான பிரேசிலுக்கு எதிராக இந்திய அணி களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com