ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-கோவா அணிகள் இன்று மோத உள்ளன.
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்
Published on

கோவா,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்திக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் சென்னையின் எப்.சி. நிர்வாகம், வெளிநாட்டு வீரர்கள் உள்பட பல வீரர்களை மாற்றி தனது அணியை வலிமைப்படுத்தி இருக்கிறது. எனவே சென்னை அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜாம்ஷெட்பூரில் நேற்று நடந்த 3-வது லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. 35-வது நிமிடத்திற்கு பிறகு 10 வீரர்களுடன் ஆடிய போதிலும் ஜாம்ஷெட்பூர் அணி நெருக்கடி சமாளித்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com