ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on

மும்பை,

2021-2022-ம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஐ.எஸ். எல். போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் இனிமேல் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். கடந்த ஆண்டு வரை 6 இந்திய வீரர்கள் களம் கண்டனர். தற்போது அந்த எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு அணியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com