ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா எப்.சி - ஏடிகே மோகன் பகான் ஆட்டம் 'டிரா'

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா எப்.சி - ஏடிகே மோகன் பகான் ஆட்டம் 'டிரா'
Published on

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியின் சார்பில் ரெடீம் ஆட்டத்தின் 5 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மோகன் பகான் அணி சார்பில் ஜோனி கவுகோ ஆட்டத்தின் 8 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் ஏடிகே மோகன் பகான் அணி 3 வது இடத்திலும் ஒடிசா எப்.சி அணி 7 வது இடத்திலும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com