

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த ஆட்டம் கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீடித்தது.ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளின் பாதுகாப்பு ஆட்டம் ஆடியதால், போட்டி கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் மெரினோ தலையால் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றார். இறுதி வரை அந்த முன்னிலையை தக்கவைத்த ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. காலிறுதியில் ஸ்பெயின் அணி, அமெரிக்கா - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.