நடத்தும் நாடுகளுக்கு நேர்ந்த சோகம்... உலகக் கோப்பையில் இருந்து அமெரிக்கா, மெக்சிகோ, கனடா வெளியேற்றம்

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளின் உலகக் கோப்பை பயணமும் நாக்அவுட் சுற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
நடத்தும் நாடுகளுக்கு நேர்ந்த சோகம்... உலகக் கோப்பையில் இருந்து அமெரிக்கா, மெக்சிகோ, கனடா வெளியேற்றம்
Published on

சென்னை,

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று அணிகளும் நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

நடத்தும் நாடுகள் வெளியேற்றம்

நடத்தும் நாடாக இருந்த அமெரிக்கா, இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) போட்டியில் பெல்ஜியத்திடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல், மெக்சிகோ அணி இங்கிலாந்திடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது.

மற்றொரு நடத்தும் நாடான கனடா, மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

ரசிகர்கள் ஏமாற்றம்

இதன் மூலம், 2026 பிபா உலகக் கோப்பையை இணைந்து நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளின் பயணமும் நாக்அவுட் சுற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருந்தபோதிலும், மூன்று நடத்தும் நாடுகளாலும் காலிறுதியை எட்ட முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com