

போஸ்டன் ,
உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மொராக்கோ.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகள் இடையிலான லீக் ஆட்டம் போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் மொராக்கோ அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே மொராக்கோ அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, 2-வது நிமிடத்தில் பிராஹிம் டியாஸ் வழங்கிய அசிஸ்டை சரியாக பயன்படுத்தி கொண்ட இஸ்மாயில் சாய்பரி, பந்தை கோலாக மாற்றினார். இதன் மூலம் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. எனினும், முதல் பாதி முடியும் வரை எந்த அணியாலும் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் சமநிலை கோலை அடிக்கும் நோக்கில் ஸ்காட்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் மொராக்கோவின் தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இஸ்மாயில் சாய்பரி அடித்த ஒரே கோல் மொராக்கோ அணியின் வெற்றியை உறுதி செய்தது.