உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-குரோஷியா போட்டி; கோல் எதுவுமின்றி முடிந்த முதல் பாதி

போட்டியின் 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

உலகக்கோப்பை கால்பந்து:  போர்ச்சுகல்-குரோஷியா போட்டி; கோல் எதுவுமின்றி முடிந்த முதல் பாதி
Published on

டொரண்டோ

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல்-குரோஷியா போட்டியின் முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின.

முதல் பாதி

கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணிக்கு ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. போட்டியின் 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com