

மும்பை,
6 அணிகள் இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப்பின் ஜலந்தர் மற்றும் மொகாலியில் அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உணர்வுபூர்வமான சூழல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம், ஆசிய ஆக்கி சம்மேளனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் எதிர்ப்பால் இந்த போட்டி இந்தியாவில் நடப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.