இந்திய ஆக்கி விருதுகள் 2023: சிறந்த வீரராக ஹர்திக் சிங் தேர்வு

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.
image courtesy: twitter/@TheHockeyIndia
image courtesy: twitter/@TheHockeyIndia
Published on

புதுடெல்லி,

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். அதன்படி, புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பாக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஹர்திக் சிங் தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் சிறந்த கோல் கீப்பராக சவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

2024 ராஞ்சில் நடந்த ஒலிம்பிக் ஆக்கி தகுதிச்சுற்றில், தொடருக்கான சிறந்த இளம் வீரர் விருதை வென்ற "தீபிகா"-வுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2022- 2023 எப்.ஐ.எச். ஆக்கி லீக்கில் அதிக கோலடித்த "ஹர்மன்ப்ரீத் சிங்"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற "மந்தீப் சிங்"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த பெண்கள் ஆசிய கோப்பைக்கான போட்டியில் தொடர் நாயகி விருது வென்ற "சலீமா"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதே தொடரில் ரைசிங் வீராங்கனை விருதை வென்ற "சங்கீதா குமாரி"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பல வீரர், வீராங்கனைகளுக்கும் விருதுகளும், காசோலையும் வழங்கப்பட்டன. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கரவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இந்திய ஆக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com