மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

மாநில ஆக்கி போட்டியின், தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றிபெற்றது.
மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி
Published on

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் சாய்-ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதின.

இதில் சாய் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது. சாய் அணியில் யுவராஜ் 13-வது நிமிடத்திலும், சரவணகுமார் 17-வது நிமிடத்திலும், சண்முகவேல் 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஏ.ஜி.அலுவலக அணி தரப்பில் சண்முகம் 50-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபால் துறை-தமிழ்நாடு போலீஸ் (காலை 7 மணி), சென்னை மாநகர போலீஸ்-ஆக்கி அகாடமி (பிற்பகல் 2.30 மணி), ஆயுதப்படை போலீஸ்-வருமான வரி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com