

அமராவதி,
சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆந்திராவைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகையும், திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க 5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
ஆந்திராவில் உதவி கலெக்டராக பணியாற்றும் ஸ்ரீகாந்த், தனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக முதல்-மந்திரி உறுதி அளித்ததாகவும், திருப்பதியில் உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாடமியை உருவாக்குவேன் என்றும் கூறினார்.