

உலான்பத்தார்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்க ளுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற் றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பா னின் டாய்சி இவாயை சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். விஸ்வநாத் சுரேஷ் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர்.
ஒட்டுமொத்தத் தில் இந்தியா 5 தங்கம் உள்பட 16 பதக்கங்களை கைப்பற்றி 2-வது இடம் பிடித்து அசத்தியது. இந்தியாவை விட ஒரு தங்கப்பதக்கம் அதிகம் வென்ற கஜகஸ்தான் (6 தங்கம்) பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.