‘பி’ டிவிசன் கைப்பந்து: இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி. அணி

கோப்புப்படம்
மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் மற்றும் மகளிருக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. அணி 26-28, 25-18, 25-20, 25-18 என்ற செட் கணக்கில் லயோலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் எஸ்.ஆர்.எம். அகாடமி 25-23, 25-21, 25-20 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ.டி. அணியை சாய்த்தது.
மகளிர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. 21-25, 29-27, 25-23 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் தெற்கு ரெயில்வே 25-6, 25-12 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் பெல்லோஷிப்பை எளிதில் வென்றது. இன்று இறுதிப்போட்டி நடக்கிறது.






