ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்
Published on

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.

கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இந்த பிரிவில் இந்தோனேஷியா (3 வெற்றி) முதலிடமும், தென் கொரியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானிடம் தோற்றது. இந்திய அணியில் அஷ்மிதா சாலிஹா (ஒற்றையர் பிரிவு) மட்டும் வெற்றி பெற்றார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர். தனது 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இந்தியா லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com