

ஒடென்ஸ்,
டென்மார்க் நாட்டில் நடந்து வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.
இதில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார். போட்டி 30 நிமிடங்களில் முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார்.