ஊக்கமருந்து சோதனை விதிமீறல்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா நீக்கம்

காமன்வெல்த் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்து சோதனை விதிமீறல்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா நீக்கம்
Published on

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜூடோ வீராங்கனை துலிகா மான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை கடந்த 12 மாதங்களில் 3 முறை அளிக்க தவறியதால் அவரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து காமன்வெல்த் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான துலிகா 2022-ம் ஆண்டு காமன் வெல்த்போட்டியில் 78 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக் கம் வென்றவர் ஆவார். நடப்பு காமன்வெல்த் அணியில் இருந்து ஜூடோ பிரிவில் கழற்றி விடப்பட்ட 2-வது இந்தியர் ஆவார்.

ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த ஜூடோ வீரர் அருண்குமாரும் நீக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com