குடிநீர் வீணடிப்பு: விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

குடிநீர் வீணடிப்பு செய்ததற்காக, விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடிநீர் வீணடிப்பு: விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியின் வீடு டெல்லி-அரியானா எல்லைப்பகுதியில் உள்ள குர்கிராமில் உள்ளது. அவருக்கு சொந்தமான கார்கள் அந்த வீட்டில் உள்ளன. வீட்டு ஊழியர்கள் விராட்கோலியின் காரை கழுவுவதற்கு குடிநீரை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com